WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Whatsapp Channel Join Now

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) வேலை; 309 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 24 மே 2025

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) 2025 முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, வேலை செய்யும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.

காலி பணியிடங்களுக்கான விவரம்: 

  1. ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்), காலியிடங்கள்: 309, கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 27 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.சம்பளம்: ரூ.40000 – 3% – 140000/-.

குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு

தேர்வு முறை: கணினி அடிப்படையிலான சோதனை, விண்ணப்ப சரிபார்ப்பு / குரல் சோதனை / உளவியல் பொருட்கள் சோதனை / உளவியல் மதிப்பீடு / உடல் மருத்துவ பரிசோதனை / பின்னணி சரிபார்ப்பு (பதவிக்கு பொருந்தும்)

விண்ணப்ப கட்டணம்:  பெண்கள்/பட்டியல் இனத்தவர்/ பட்டியல் பழங்குடியினர்/ முன்னாள் ராணுவ வீரர் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் – இல்லை, இதர பிரிவனருக்கு  பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் –  ரூ.1000/-

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.aai.aero/ கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 25 ஏப்ரல் 2025 முதல் 24 மே 2025 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்: 

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 25 ஏப்ரல் 2025 

விண்ணப்பிக்க கடைசி தேதி – 24 மே 2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விண்ணப்ப படிவம்

Leave a Comment